2022-05-19 755
வுழுவுடன் இருக்கின்றேனா என சந்தேகம் வந்தால்?
வுழுவுடன் இருக்கின்றேனா என சந்தேகம் வந்தால்?
அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அல்லாஹ்வால் ம‌னித சமுதாயத்திற்கு கடமையாக்கப்பட்ட தொழுகையை நிறைவேற்ற அம்மனிதன் வுழுவுடன் இருப்பது அவசியமானதாகும். அந்த அடிப்படையில் அனைவருக்கும் அடிக்கடி எழக்கூடிய சந்தேகம் தான் ஒருவர் தொழுகைக்காக நிற்கும் நேரத்தில் தான் வுழுவுடன் இருக்கின்றேனா? என மனதில் தோன்றுவதாகும்  ஒருவர் தொழுகைக்காக வருவதற்கு முன் வுழுவுடைய நிலையில் இருந்திருப்பார். பின்னர் வுழுவுடன் இருக்கின்றேனா? அல்லது வுழுவை முறிக்கும் காரியங்கள் ஏதாவது நிகழ்ந்தனவா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்நிலையில் எவ்வாறு நாம் முடிவெடுப்பது? என்பதனையே நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.…
2022-04-26 590
பிரயாணிக்கு எது சிறந்தது? நோன்பை நோற்பதா? அல்லது விடுவதா?
பிரயாணிக்கு எது சிறந்தது? நோன்பை நோற்பதா? அல்லது விடுவதா?
ஒரு பிரயாணி நோன்பு நோற்ற நிலையில் பிரயாணம் செய்யலாமா? இல்லையா? என்கின்ற விடயத்தில் பல கேள்விகள் நமக்கு மத்தியில் எழுகின்றன. அல்லாஹ் குர்ஆனில் சூரத்துல் பகரா :185  ஆவது வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான். "............ எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) வேறு நாட்களில் நோற்கட்டும் ஆகவே இந்த நிலையில் நோன்பை நோற்பது சிறந்ததா? அல்லது விடுவது சிறந்ததா? அல்லது நோற்கவே கூடாதா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஒரு பிரயாணி பிரயாணத்தில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்…
2022-04-13 2078
பால்குடி சகோதரிக்கு உள்ள உரிமைகள்?
பால்குடி சகோதரிக்கு உள்ள உரிமைகள்?
அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள். மீது ஸலவாத் சொன்ன பின்.  இன்றைய கால கட்டத்தில் எமது சமுதாயத்தில் எழும் மிக முக்கியமான கேள்விதான் "ஒரு ஆண் தனது பால்குடி சகோதரியோடு தனித்து பிரயாணம் செய்யலாமா? அல்லது தனிமையில் பேசிக்கொண்டிருப்பது அனுமதியா ? என்பதாகும். எம் முன்னோர்களின் காலங்களில் ஒரு தாய் தான் பெற்றெடுக்காத பிள்ளைக்கு தேவை ஏற்படின் பாலூட்டும் வழக்கு சாதாரணமாக இருந்தமை நாம் அறிந்த விடயமே. இவ்வாறு ஐந்து விடுத்தம் பாலூட்டினால் அந்தக் குழந்தை பாலூட்டிய தாயின் பிள்ளைகளுக்கு பால்குடி சகோதரியாகிவிடும்.…
2022-04-03 766
வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா?
வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா?
الرحيم வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா? இன்று எமது சமுதாயத்தில் பலர் வுழு செய்யும் பொழுது தலையை தடவுகின்ற (மஸஹ் செய்தல்) வேளையில் தலைமுடி இருக்கும் அமைப்பு குழைந்து விடக்கூடாது என்பதற்காக அல்லது இது போன்ற வேறு சில காரணங்களுக்காக தண்ணீரைப்படுத்தி தலையின் ஒரு ஓரத்தில் அல்லது முடியின் சில பகுதிகளில் தடவுவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு செய்வது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையா? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒருவர் தொழுகைக்காக வரும்…
2022-03-22 654
கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா??
கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா??
‎الرحيم கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா? அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்... பல விடயங்கள் அல்லாஹ்வின் சட்டங்களில் தெளிவாக மக்களுக்கு சொல்லிக் காட்டப்பட்டுள்ள போதிலும் அதனுடைய பாரதூரம் தெரியாமல் அவைகளை வீணானவைகளாகவும் விளையாட்டாகவும் எடுத்து அவைகளில் பொடுபோக்காக இருந்துவருகிறோம். அல்லாஹ் அந்த விடயங்களுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதை அதனோடு அவன்…